புகையிலை விற்றவர் கைது

மேலூர்: மேலூர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவரை போலீசார் கைது செய்தனர். மேலூர் அருகே வலையங்குளத்து பட்டியை சேர்ந்த ஞானசேகர் மகன் சந்திரசேகர்(48). இவர் தனது வீட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்து. நேற்று மாவட்ட எஸ்பியின் ஸ்பெஷல் போலீசார் அக்கடையில் சோதனையிட்ட போது, பள்ளி மாணவர் ஒருவருக்கு புகையிலையை சந்திரசேகர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார் கடையில் வைத்திருந்த 13 பாக்கெட; புகையிலை மற்றும் ரொக்கம் ரூ.1040 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: