சுரண்டை, ஆக.4: சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை துவங்குகிறது என்று முதல்வர் பீர்கான் தெரிவித்தார். இது குறித்து சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) பீர்கான் வெளியிட்ட செய்தி குறிப்பு: அனைத்து பாடங்களுக்கான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு ஆகிய சிறப்பு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை நடக்கிறது. 11ம் தேதி கணிதம், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல், நுண்ணுயிரியல் ஆகிய அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு நடக்கிறது.