உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், ஜூன் 14: திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உலமாக்கள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் விசாகன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திண்டுக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரிய அட்டை பெற்றுள்ளவர்களில், 60 வயது நிறைவடைந்தவர்களுக்கு ஓய்வூதியம் மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. எனவே, இவ்வாரியத்தின் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியம் பெற விரும்பும் உறுப்பினர்கள் உரிய விண்ணப்பத்துடன் அசல் உலமா அட்டை, ஆதார் நகல் மற்றும் வயது சான்று உள்ளிட்ட ஆவணங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: