பந்தலூர், ஜூன் 11: பந்தலூர் அருகே உலக உணவு தினத்தை முன்னிட்டு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஏகம் பவுண்டேஷன் சார்பில் பாதுகாப்பான உணவு, ஆரோக்கியமான வாழ்வு என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. தேவாலா அண்ணை வேளாங்கண்ணி கணினி பயிற்சி மையத்தில் நடந்த கருத்தரங்கிற்கு கணினி பயிற்சி மைய ஆசிரியர் தனுஷ்கா தலைமை தாங்கினார். இதில், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசுகையில்,``மனித வாழ்வுக்கு மிகவும் அடிப்படையான ஒன்று உணவு. இவை சரிவிகித ஊட்டச்சத்து தரக்கூடிய உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியது
அவசியம். உணவு மூலம் கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள் மட்டுமே உடல் உறுப்புகளை சரியான வழியில் செயல்படுத்த உதவும் என்பதனால் ஊட்டச்சத்து உள்ள உணவுகளை தேர்வு செய்து உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.