மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை

சென்னை: உலகின் கலைநயமிக்க பிரைடல் நகைகளின் கண்காட்சி தற்போது சென்னை தி நகர்  மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவன ஷோரூமில் நடக்கிறது. இதில் மதிப்புமிக்க மற்றும் தனித்துவமான மணப்பெண்ணுக்கான தங்கம், வைரம், பிளாட்டினம் நகை கலெக்‌ஷன்கள்  காட்சிக்கு வைக்கப்பட்டன.கடந்த 21ம் தேதி தீபிகா படுகோனின் திருமண தென்னிந்திய வரவேற்பு தோற்றம், அனுஷ்கா ஷர்மா, பிரியங்கா சோப்ரா, ஆலியா பட் ஆகியோர் திருமண தோற்றத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில மணப்பெண்கள், அவர்களது கலாச்சார நகைகளை அணிந்து வாடிக்கையார்களுக்கு காட்சியளித்தனர்.

பேப்வென்ட்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிக்கு, சென்னையை சேர்ந்த டிசைனர் ரூபீனா அப்ரோஸ், தீபக் பட்டுப் புடவைகள் (பாரம்பரிய நெசவாளர்கள்) ஆடை அலங்காரம் செய்யப்பட்டது. 22ம்  தேதி  சென்னையை சேர்ந்த ருபீனா அப்ரோஸின் ஆடைகள், புடவைகளின் காட்சி பெட்டி, காஞ்சிபுரத்தை சேர்ந்த தீபக் பட்டுப் புடவைகளில் இருந்து 2 பேரும் தங்களது பெருநாளுக்கான திருமண உடைகள் மற்றும் நகைகளுடன் கூடிய ஸ்டைலிங் டிப்ஸ்கள் குறித்து வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினர்.28ம்  தேதி நிருத்யாஞ்சலி வெளியீடு மூலம் நன்கு அறியப்பட்ட, மூத்த பாரம்பரிய நடனக் கலைஞர்களான சாந்தா தனஞ்சயன், தனஞ்சயன் நடன நிகழ்ச்சி நடந்தது.

Related Stories: