உசிலம்பட்டி, மே 21: உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் கடந்த 2021 அக்.2ல் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக ரூ.1.33 கோடி மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடம், ரேஷன் கடை, குடிநீர் தொட்டி உள்ளிட்ட 12 திட்ட பணிகள் முடிக்கப்பட்டன. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை கலெக்டர் விசாகன், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி மக்களுக்கு அர்ப்பணிப்பு செய்தனர்.