விருதுநகர், மே 18: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு நோயாளிகளுக்கான விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பொது மருத்துவர் பழனிக்குமார் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கினார். தலைமை மருத்துவர் அன்புவேல், நிலைய மருத்துவர் முரளிதரன், நரம்பியல் மருத்துவர் வெங்கடேசன், பேராசிரியர்கள் முருகேசன், ரேணுகாதேவி ஆகியோர் ரத்த அழுத்த நோயை கட்டுப்பாட்டில் வைப்பது தொடர்பான அறிவுரைகளை வழங்கினர்.