நீலகிரி எம்பி ஆ.ராசா பேச்சு மகளிர் குழுக்கள் கடன் தள்ளுபடி பெற ஆவணங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தல்

ஊட்டி, மே 18: மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் தள்ளுபடி பெற ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என கூட்டுறவுத்துறை கேட்டு கொண்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் வாஞ்சிநாதன் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை மூலம் மகளிர் சுய உதவிக்குழு கடன் பெற்ற குழுக்கள், தமிழக அரசு அறிவித்துள்ள கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் பயன் பெற தகுதியான நபர்கள், தங்களின் ஆதார் அட்டை மற்றும் மின்னணு ரேஷன் கார்டு நகல்களை தாங்கள் மகளிர் சுய உதவி குழு கடன் பெற்ற வங்கியிலோ, சங்கங்களிலோ இதுவரை வழங்காதவர்கள் மேற்படி ஆவணங்களை உடனே சமர்ப்பித்து மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி பட்டியலில் இடம் பெற்று பயன் பெறலாம்.

Related Stories: