பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

பந்தலூர், ஏப்.23: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தாளூர் பகுதியில் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும், முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரண்டாம் ஆண்டு இளநிலை படிக்கும் மாணவர்கள் இருவர் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரை தாக்கியுள்ளனர். இதில் அந்த மாணவர் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவரும் அவரது பெற்றோரும் எருமாடு போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பந்தலூர் அருகே கல்லூரி மாணவர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Related Stories: