மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு

 

மேட்டுப்பாளையம், ஏப்.20: மேட்டுப்பாளையம் அண்ணாஜி ராவ் சாலை அருகே உள்ள நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். மக்களவைத்தேர்தலையொட்டி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அண்ணாஜி ராவ் சாலையில் உள்ள நகரவை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

இங்கு நேற்று மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அடிப்படை வசதிகள் முறையாக உள்ளதா? என கேட்டறிந்தார். தொடர்ந்து போலீசாரிடம் பேசிய அவர் கண்காணிப்பு கேமராக்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். வாக்குச்சாவடிக்குள் யாரும் போன் எடுத்துச்செல்லக்கூடாது என அறிவுறுத்தினார்.

The post மேட்டுப்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மேற்கு மண்டல ஐஜி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: