சிறுமி, மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் 2 வாலிபர்கள் கைது

ஈரோடு,மே13:  ஈரோடு மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் பாபுராஜ் என்கிற பாபு (29). தொழிலாளியான இவர் சென்னிமலை ரோடு ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை மிரட்டி பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து பெற்றோர் ஈரோடு தெற்கு போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பாபுவை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வாலிபர் பாபு மீது ஏற்கனவே ஈரோடு டவுன், மொடக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் ஸ்டேசன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2020ம் ஆண்டு குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக போலீசார் கூறினர்.

 

கொடுமுடி அடுத்துள்ள பாசூர், பனங்காட்டுபுதூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் தாமோதரன் (22). இவர் அப்பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை பலாத்காரம் செய்துள்ளார். இதில் 2 அந்த மாணவி கர்ப்பமடைந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பெற்றோர்களிடம் கூறியதையடுத்து மலையம்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. பின்னர் தாமோதரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

Related Stories: