மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வருமாறு தமிழக முதல்வருக்கு நீலகிரி திமுக அழைப்பு

ஊட்டி, மே 12: ஊட்டியில் வரும் 20ம் தேதி நடக்கும் மலர் கண்காட்சியை துவக்கி வைக்க வருமாறு தமிழக முதல்வருக்கு நீலகிரி திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20ம் தேதி ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சி துவங்கி 5 நாட்கள் நடக்கிறது.  இந்த மலர் கண்காட்சி துவக்கி வைக்கவும், 21ம் தேதி நடைபெறவுள்ள அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு,  மாவட்டத்திற்கான பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை துவக்கி வைக்க தமிழக முதல்வர் வர வேண்டும் என நீலகிரி மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் முபராக் அழைப்பு விடுத்துள்ளார். இந்நிகழ்வின் போது, திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ.ராசா, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை கழக செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: