பெரம்பலூர்,மே.10: பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3ம்தேதி சில சமூக விரோதிகளால் படுகொ லை செய்யப்பட்ட லாடபுரம் மெடிக்கல் உரிமையாளர் நாகராஜன் கடந்த 2ம் தேதி மாமூல் கொடுக்காத காரணத்தால் நாகராஜனை அடித்துக் கொலை செய்த, புதுஆத்தூர் அதிமு க கிளைச் செயலாளர் எழுத்தாணி என்கிற பிரபாகர ன்(26), ரகுநாத், சுரேஷ், கார் த்திக் ஆகிய 4 பேர்களை போலீசார் கைதுசெய்தனர். அஜீத்குமார் என்பவரைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொது மக்கள் 200க்கும் மேற்பட் டோர் நேற்று பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவ லகத்திற்குத் திரண்டுவந் தனர். கலெக்டர் அலுவலக சிறுவர் பூங்காமுன்பு குவி ந்த அனைவரையும் பாது காப்புப் போலீசார் தடுத்து நிறுத்தி குறிப்பிட்ட சிலர் மட்டும்உள்ளேசென்று மனு கொடுக்க வலியுறுத்தினர். கலெக்டரை நேரில் சந்தித்து தான் நீதிகேட்க வேண் டும் அதனால் எங்களைத் தடுக்காதீர்கள் எனக் கோஷமிட்ட பொதுமக்கள் போ லீசாரின் தடையைமீறி க லெக்டர் அலுவலகத்திற்கு சென்று, போர்டிகோவில் முற்றுகையிட்டனர். சிறிது நேரம் கழித்து வெளியே வ ந்த மாவட்ட வருவாய் அலு வலர் அங்கயற்கண்ணி போராட்டம் நடத்தும் பொது மக்களைக் கண்டுகொள் ளாமல் சென்றதால் ஆத்தி ரமுற்ற அனைவரும் தரை யில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 2பெண்கள், இறந்த வரை நினைத்து ஒப்பாரி பாடியதால், பெண்களில் 10க்கும் மேற்பட்டோர் கண் ணீர்
வடித்தனர்.தொடர்ந்து கலெக்டரை சந் திக்க நேரமானதால் கொந் தளித்த பொதுமக்கள் கலெ க்டரை அவரது அறைக்கே சென்று சந்தித்து முறையிட த்துணிந்து கலெக்டர் அலு வலகத்திற்குள் உள்ளே நு ழைய முற்பட்டனர்.