பஞ்சாயத்து அலுவலகத்தை திறக்க கோரிக்கை
மூணாறு, ஏப். 28: கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ளது இடமலைக்குடி. மாநிலத்திலேயே பழங்குடியின மக்களுக்காக உருவாக்கப்பட்ட முதல் பஞ்சாயத்து இதுவாகும். சொந்த ஊராட்சி அலுவலகத்துக்கு செல்ல ஒரு நாள் பயணிக்க வேண்டிய அவலநிலையில் இடமலைக்குடியில் உள்ள ஆதிவாசி குடும்பத்தினர் உள்ளனர். தேவிகுளத்தில் செயல்பட்டு வரும் இவர்களின் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் 40 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும் என்பதே தற்போதைய நிலை. கேரளாவில் உள்ள ஒரே பழங்குடியினர் ஊராட்சியாக இடமலக்குடி உருவானதில் இருந்து தாலுகா தலைமையகமான தேவிகுளத்தில் பஞ்சாயத்து அலுவ