துர்கா பகவதி அம்மன் கோயில் திருவிழா பொங்கல் வைத்து பெண்கள் வழிபாடு

கூடலூர், ஏப்.8:  கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மாக்குமூல பகுதியில் ஸ்ரீ துர்க்கா பகவதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமம், கொடியேற்றத்துடன் பங்குனி மாத திருவிழா  துவங்கியது.

இதனை தொடர்ந்து, நேற்று காலை கோயிலின் முன்பாக  50க்கும் பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பொங்கல் பானைகளுக்கு செண்டை மேளம் முழங்க தீபாராதனை நடத்தப்பட்டது. மாலையில் தாலப்பொலியுடன் அம்மன் ஊர்வலம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு பூச்சொறிதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. கொரோனா பரவல் காரணமாக, 2 வருடங்களாக திருவிழா நடத்தப்படாத நிலையில் தற்போது நடைபெற்ற திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: