பல்லடம், மார்ச் 22: பல்லடம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலா ஒரு வகுப்பறை புதிய கட்டடம் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்படவுள்ளது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இது பற்றி அறிந்த பல்லடம் நகர திமுக பொறுப்பாளர் ராஜேந்திரகுமார் நகரின் வளர்ச்சியிலும் சமுதாய தொண்டிலும் ஆர்வம் கொண்டுள்ளவர்களை அணுகி அரசு பள்ளிக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து வருகிறார்.