அவிநாசி. மார்ச் 22: பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர் சேவை மையம் அவிநாசியில் இயங்கி வருகிறது. இதில் தனியார் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில், தமிழகம், கேரளா உள்ளடக்கிய 130க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஊழியர்கள் கடந்த பிப்ரவரி மாத சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், பணி நிறுத்தப் போவதையும் கண்டித்து அவிநாசி பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் சேவை மையத்தில் நேற்று மாலை அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.