கோத்தகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது

கோத்தகிரி, மார்ச் 19: கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை பகுதியை சேர்ந்தவர் தீபக் (23). இவர், கோத்தகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மாணவர்கள், வாலிபர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வருவதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

எஸ்ஐ சேகர் தலைமையிலான போலீசார் கொணவக்கரை சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது கொணவக்கரையில் இருந்து கணுவட்டி செல்லும் சாலையில் வனப்பகுதி ஓரத்தில் நின்ற காரில் தீபக், கஞ்சா பொட்டலங்களுடன் இருந்தது தெரியவந்தது.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில் சமவெளி பகுதியில் இருந்து கஞ்சா வாங்கி வந்து மாணவர்கள், வாலிபர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, தீபக்கை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Related Stories: