அரசனூரில் இன்று மின்தடை

சிவகங்கை, மார்ச் 17: சிவகங்கை அருகே அரசனூர் துணைமின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளுக்கு இன்று மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அரசனூர் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி அரசனூர், இலுப்பக்குடி, திருமாஞ்சோலை, படமாத்தூர், பச்சேரி, பில்லூர், பெத்தனேந்தல், களத்தூர், வேம்பத்தூர், ஏனாதி உட்பட இந்த துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. இவ்வாறு மின் துணைமின்நிலைய உதவி பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: