திண்டுக்கல், மார்ச் 12: தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் வக்பு வாரிய சொத்துக்களை வக்பு வாரியம் கண்காணித்து வருகிறது. வக்புவாரிய சொத்துக்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, போலி பத்திரங்கள் மூலம் விற்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது. இவைகளை மீட்பதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளார். திண்டுக்கல்லில் பேகம்பூர் வக்பு வாரிய இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, மசூதிகளின் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை நீதிமன்றம் சென்று வென்றுள்ளோம்.