ராசிபுரம், மார்ச் 5: ராசிபுரம் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்ட கவிதா சங்கர், துணைத்தலைவர் கோமதி ஆனந்த் ஆகியோருக்கு, கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். ராசிபுரம் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் 24 வார்டுகளில் வெற்றி பெற்றது. ராசிபுரம் நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 15வது வார்டு திமுக கவுன்சிலர் கவிதா சங்கர், போட்டியின்றி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி., மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.