குளித்தலை காவல் நிலையத்தில் திருச்சி சரக டிஐஜி வருடாந்திர ஆய்வு

குளித்தலை, மார்ச் 4: குளித்தலை காவல்நிலையத்தில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார். கரூர் மாவட்டம், குளித்தலை காவல் நிலையத்தில் திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் சரவணசுந்தர் வருடாந்திர ஆய்வு பணி மேற்கொண்டார். பின்னர் அவர் பல்வேறு கோப்புகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குளித்தலை டிஎஸ்பி தர், இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு சென்று இன்ஸ்பெக்டர் நாவுக்கரசனிடம் போக்குவரத்து காவல் பணி குறித்து விசாரணை செய்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Related Stories: