திண்டுக்கல், பிப். 10: திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியினர் வேட்பாளர்களுக்கான தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நகர் வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமை வகித்தார். இதேபோல் பட்டிவீரன்பட்டியில் தேர்தல் விதிமுறைகள் குறித்து அனைத்து கட்சி வேட்பாளர்களுடனான கூட்டத்திற்கு இன்ஸ்பெக்டர் சங்கரேசன் தலைமை வகிக்க, எஸ்ஐ சின்னப்பன் முன்னிலை வகித்தார். கூட்டங்களில், பொது கூட்டங்களுக்கு உரிய முன் அனுமதி பெற வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அறிவுரைகள் பின்பற்றப்பட வேண்டும், கூட்டங்கள் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே நடத்தப்பட வேண்டும், ஊர்வலங்கள் ஏற்பாடு செய்யும் அரசியல் கட்சி அல்லது வேட்பாளர் நேரம், துவங்குமிடம், வழித்தடம், முடிவடையும் இடம் குறித்து முன்னதாக அனுமதி பெற்றிருக்க வேண்டும், தேர்தல் விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு மேலாக வேட்பாளர் செலவினங்களை மேற்கொள்ள கூடாது.