கோவை: உழவர் பெருந்தலைவர் என போற்றப்படும் நாராயணசாமி நாயுடுவின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னூர் வட்டம் வையம்பாளையம் பகுதியில் உள்ள அவரின் திருவுருவ சிலைக்கு, கோவை மாவட்ட வருவாய் அலுவலர், லீலா அலெக்ஸ் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், வருவாய் கோட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். விவசாயிகளின் போராட்ட முறைகளை செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக நாராயணசாமி நாயுடு உள்ளார். தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1973-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி துவங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.