கடலூர், பிப். 3: புதுச்சேரியில் இருந்து மினி லாரியில் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி விஜிகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பத்மா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார், கடலூர் திருவந்திபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பில்லாலி தொட்டி பாலம் வழியாக வந்த ஒரு மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் காய்கறி பெட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பெட்டிகளை அகற்றிவிட்டு சோதனை செய்தபோது, 46 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது.இதையடுத்து லாரியை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அறந்தாங்கியை சேர்ந்த சுப்பையா மகன் சரவணன் (34) என்பதும், புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக புதுக்கோட்டைக்கு மதுபாட்டில்களை கடத்திச் செல்ல இருந்ததும் தெரியவந்தது.