திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம்

சீர்காழி, பிப்.3: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. சீர்காழி அருகே திருவெண்காடு  பிரம்ம வித்யாம்பிகை உடனுறை  சுவேதாரண்யேஸ்வரர் கோயிலுக்கு உட்பட்ட திருவெண்காடு அய்யனார் கோயில் தெருவில் எழுந்தருளியிருக்கும்  ஐயனார் சுவாமி கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி ஐயனார் திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்தனர். இதில் மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் நெடுஞ்செழியன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி, ஊராட்சி தலைவர் சுகந்தி நடராஜன், மேலாளர் சிவானந்தம், காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகி அன்பு, ஒன்றிய கவுன்சிலர் பஞ்சு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Related Stories: