ஜெயங்கொண்டம் அருகே புகையிலை விற்ற 2 பேர் கைது

ஜெயங்கொண்டம்,ஜன.19: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவை சேர்ந்த மணிகண்டன் (30), இடையார் கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் (45) ஆகியோர் பெட்டி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

Related Stories: