3 நாள் டாஸ்மாக் கடைகள் மூடல்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், திருவள்ளுவர் தினம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வரும் 15ம் தேதியும், வள்ளலார் தினத்தை முன்னிட்டு 18ம் தேதியும், குடியரசு தினமான 26ம் தேதியும் இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் வரும் 15, 18 மற்றும் 26ம் தேதிகளில் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூடி வைக்க வேண்டும். இந்த 3 நாட்களும் மதுபான விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related Stories: