ஆண்டிபட்டி: தமிழகத்தில் தைப்பொங்கலையொட்டி வெல்லம், பச்சரிசி, ரவை, கோதுமை, சீரகம், மிளகு, பாசிப்பருப்பு, முந்திரி, ஏலக்காய் மற்றும் கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு, அரிசி கார்டுதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக எல்லாப் பொருள்களும் தடையின்றி வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஆண்டிபட்டி மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் பரிசு தொகுப்பில் முழுமையாக உள்ளதா, அதனுடைய அளவு முழுமையாக உள்ளதா என எம்.எல்.ஏ மகாராஜன் நேற்று ஆய்வு செய்தார்.