போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற தம்பதியை தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார்

வேலூர், மே 3: போலீஸ் நிலையத்தில் தம்பதியை தாக்க முயன்றதாக எஸ்எஸ்ஐ மீது எஸ்பி அலுவலகத்தில் நேற்று மூதாட்டி புகார் அளித்தார். காட்பாடி அடுத்த பனமடங்கி அருகே உள்ள வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சித்ரா(60). இவர் நேற்று மதியம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கண்ணன் உடல்நலம் சரியில்லாததால் மருத்துவமனைகளில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வருகிறார். எங்கள் வீட்டின் அருகே தேங்காய் மட்டைகள் அடுக்கி வைத்துள்ளோம். அவற்றை சில நாட்களுக்கு முன்பு அங்கு வசிக்கும் ராமச்சந்திரன், பிரேமா தம்பதியர் சாலையில் வீசி எங்கள் இருவரையும் ஆபாசமாக பேசினர். இதுதொடர்பாக பனமடங்கி போலீசில் புகார் கொடுத்தோம். அதன்பேரில் விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர். அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு சென்றோம். அப்போது அங்கு பணியில் இருந்த எஸ்எஸ்ஐ ஒருவர் என்னையும், எனது கணவரையும் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் எங்களை தாக்கவும் முயன்றார். எனவே சம்பந்தப்பட்ட எஸ்எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

The post போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற தம்பதியை தாக்க முயன்ற எஸ்எஸ்ஐ வேலூர் எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி புகார் appeared first on Dinakaran.

Related Stories: