2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

 

விருதுநகர், மே 3: சிவகாசியில் வேனில் கடத்திய 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்துவதாக விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சிவகாசி லிங்காபுரம் காலனியில் உள்ள கடை முன்பாக வாகன சோதனை நடத்தினர். சோதனையில் சந்தேகப்படும்படி வந்த கூண்டு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தினர்.

வேனில் 50 மூட்டைகளில் 40 கிலோ எடையில் 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. வேன் டிரைவர் தென்காசி கடையநல்லூர் கள்ளம்புலி கக்கன் காலனியை சேர்ந்த முத்தையாவை கைது செய்தனர். 2 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விருதுநகர் ஜேஎம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 2 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: