தளபதிசமுத்திரத்தில் சாலை பணி துவக்கம்

நாங்குநேரி, ஜன.9: தளபதிசமுத்திரத்தில் தார்சாலை அமைப்பு பணி துவங்கியது.நாங்குநேரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தளபதிசமுத்திரம் ஊராட்சி கருங்கண்ணன் குடியிருப்பு பகுதியில் புதிய தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. நாங்குநேரி யூனியன் சேர்மன் சௌமியா ஆரோக்கியஎட்வின் புதிய தார் சாலை அமைப்பு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் தளபதிசமுத்திரம் பஞ்சாயத்துதலைவர் பாலகிருஷ்ணன், நாங்குநேரி திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆரோக்கிய எட்வின் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் சுடலைகண்ணு, ஒன்றிய மற்றும் ஊராட்சி மன்ற கவுன்சிலர், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: