அரியலூர்,ஜன.9: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 17வது கட்டமாக நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 6 லட்சத்து 38 ஆயிரத்து, 231 பேர்களுக்கும், இரண்டாவது தவணை தடுப்பூசி 4 லட்சத்து 30 ஆயிரத்து756 பேர்களுக்கும் கொரோனா வைரஸ் நோய் தடுப்பூசிகள் செலுத்துப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 18வது கட்டமாக மாபெரும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்டத்தில் 6 ஒன்றியங்களுக்கு உட்பட்ட 254 இடங்களிலும், 2 பேரூராட்சிகளுக்கு உட்பட்ட 7 இடங்களிலும், 2 நகராட்சிகளுக்கு உட்பட்ட 13 இடங்களிலும், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு தலைமை மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 69 இடங்களிலும் என மொத்தம் 343 இடங்களில் சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றது.