பெ.நா.பாளையம்., ஜன.8: கோவை அருகே மகன் திட்டயதால் விரக்தியடைந்த தாய் மாயம். துடியலூர் லட்சுமி நகர் ஸ்டேட் பேங்காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயனி (48) இவர் கடந்த 27 வருடங்களாக கணவரை பிரிந்து தனது மகன் முத்துகுமார் மகள் சத்யாவுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.
மகளுக்கு கடந்த 2 வாருடத்திற்கு முன்பு திருமணம் ஆகி சோமனூரில் கணவருடன் உள்ளார். மகன் சரவணம்பட்டியில் உள்ள தனியார் கம்பெனியில் இரவு நேரம் தங்கி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை கார்த்திகேயனி வீட்டில் துணி துவைத்தார். அப்போது பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து பக்கத்து வீட்டு பெண் கார்த்திகேயனின் மகனுக்கு போன் செய்து அவரது தாய் மீது புகார் கூறினார். இதனையடுத்து முத்துகுமார் தனது தாய்க்கு போன் செய்து தாயை கண்டித்தார்.