பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன

 

பாலக்காடு,மே25: பாலக்காடு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3 ம்தேதி திறந்து செயல்படும் என மாவட்டக் கல்வி இயக்குநர் பி.வி.மனோஜ் அறிவித்துள்ளார். பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறப்பதையொட்டி பள்ளி கட்டடங்கள் பரிசோதனை நடத்தி உள்ளாட்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. பள்ளிகள் திறப்பதற்கு முன்னோடியாக கட்டடங்களுக்கு பிட்னஸ் சான்றிதழ்கள் பெற்றிருக்கவேண்டும். பள்ளி வாகனங்களின் பிட்னஸ் சரி வர உள்ளதா என ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பார்வையிட வேண்டும்.

இன்று (25ம் தேதி) முதல் பள்ளி வாகனங்களின் பிட்னஸ் சான்றிதழ்கள் சரிப்பார்க்கப்படுகிறது. ஆர்.டி.ஓ., தலைமையில் மலம்புழாவிலுள்ள வாகனப்பயிற்சி மைதானத்தில் நடைபெறும். பள்ளியில் செயல்படும் தனியார் வாகனங்களின் ஓட்டுநர்களின் லைசன்ஸ் சரிவர உள்ளதா என பள்ளி நிர்வாகம் பார்வையிட வேண்டும் அவர்கள் ஓட்டுநர் உரிமத்தின் நகல்கள் பள்ளிகளில் சமர்ப்பித்து இருக்க வேண்டும். வாகனங்கள் முழு கண்டிஷனில் உள்ளதா, வாகனங்கள் சாலைகளில் இயக்க தகுதியுடையதா என ஆர்.டி.ஓ., அதிகாரிகளும், பள்ளி நிர்வாகம் சரி பார்க்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.எஸ்.சித்ரா அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளி வளாகங்களில் ஸ்டோர் ரூம், சமையல் அறைகள், கழிவறைகள், மேற்கூரைகள் ஆகியவை பரிசோதனை நடத்தவேண்டும். பெண்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளனவா என சரிப்பார்க்க ஆய்வாளர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். குடிநீர் தொட்டிகளை தூய்மை செய்ய வேண்டும், ஸ்டோர் ரூம்களிலும், சமையல் அறைகளிலும் சுத்தப்படுத்த வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் இவற்றை சரிபார்க்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

The post பாலக்காடு மாவட்டத்தில் பள்ளிகள் ஜூன் 3ம் தேதி திறக்கின்றன appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.