சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

 

கோவை, மே 24: கோவை மாவட்டத்தில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளது. நகர் மற்றும் ஊரக பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் குட்டைகள், குளங்கள், நீரோடைகளில் தண்ணீர் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் நொய்யல் ஆற்றின் முதல் தடுப்பணையான சித்திரைச்சாவடி தடுப்பு அணைக்கு நேற்று புது வெள்ளம் வந்தது.

சிலர் ஆர்வத்துடன் தண்ணீரை பார்த்த நிலையில், குளிக்கவும் செய்கின்றனர். மேலும், இந்த தடுப்பணை கோடை வெயிலின் காரணமாக கடந்த பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வறண்டு கிடந்தது. தற்போது, பெய்து வரும் கோடை மழையினால் தடுப்பு அணைக்கு தண்ணீர் வரத்து உள்ளது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், தற்போது சித்திரைச்சாவடி தடுப்பணையில் இருந்து ராஜவாய்க்கால் மூலம் தண்ணீர் பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டுள்ளது.

The post சித்திரைச்சாவடி தடுப்பணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.