தா.பழூர்,ஜன.8: அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கோவிந்தபுத்தூர் குமணந்துறை பகுதியை சேர்ந்தவர் வசந்தா. புரந்தான் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவரிடம் வசந்தா தனது விவசாய நிலத்தின் பேரில்கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. ரவி தனது பணத்தை திருப்பி தரும்படியும் வசந்தாவிடம் கேட்டுள்ளார். அப்படி பணத்தை தர முடியவில்லையென்றால் நிலத்தை எழுதி தரும்படி கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிக்கும், வசந்தாவுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த ரவி மற்றும் அவரது உறவினர்களான நேரு, மகாதேவன், வேலரசி, ராஜாங்கம், சுந்தரமூர்த்தி, சுப்புராயன். ஆகியோரும் அங்கு வந்துள்ளனர்.