ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்க ஆண்டு விழா

வாலாஜாபாத்: தமிழ்நாடு ஒலி,ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நலச்சங்கம் சார்பில் 22ம் ஆண்டு விழா மற்றும் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நேற்று வாலாஜாபாத் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சங்கத்தின் வாலாஜாபாத் ஒன்றிய தலைவர் நாகப்பன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் அருள்மணி, ஒன்றிய பொருளாளர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் உத்தரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் திமுக பேரூர் செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் சேகர் உள்பட ஒலி, ஒளி அமைப்பு தொழிலாளர்கள் நல சங்க நிர்வாகிகள் தனசேகர், ரஜினி, கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: