கோவில்பட்டி, ஜன.1: கோவில்பட்டி நகராட்சி ஆணையாளர் ராஜாராம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகர பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் குப்பைகளை பிரித்து சேகரித்தல், மட்கக்கூடிய குப்பைகளை உரமாக்குதல், பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சிக்கு அனுப்புதல் போன்ற பல்வேறு நிலைகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தை மேம்படுத்தும் வகையில் ஸ்வாச் டெக்னாலஜி சேலஞ்ச் என்ற போட்டி நடத்தப்பட உள்ளது. இதன் முக்கிய நோக்கம் குறைந்த செலவில் கழிவு மேலாண்மை பணிகளை சிறப்புற தொழில் நுட்ப உதவியுடன் மேற்கொள்வது ஆகும்.