தேனி, டிச. 28: உத்தமபாளையத்தில் உள்ள 3 அடி அம்பேத்கர் சிலையை 6 அடி உயர சிலையாக மாற்றி வைக்க அனுமதி வழங்கக் கோரி, கலெக்டரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேனி மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி தலைமையில், அக்கட்சியினர் நேற்று தேனியில் கலெக்டர் முரளீதரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.