கோவை, டிச.28: கோவை பெரியநாயக்கன்பாளையம் அம்ச நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலில் 50க்கும் மேற்பட்டோர் முதியவர்கள், பெண்கள் குழந்தைகளுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த அம்சா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். தற்போது எங்களை காலி செய்ய சொல்லி அரசு அதிகாரிகள் மிரட்டுகின்றனர். பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் இருக்கிறது. ஆனால், இதுவரை மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை.