சின்னாளபட்டி, டிச. 25: தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களை லாபத்தில் இயக்கி கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கல்வி நிதியை அதிக அளவில் வழங்க வேண்டும் என்று மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார்.
திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் கூட்டுறவு ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் கல்வி நிதிக்கு காசோலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காந்திநாதன் முன்னிலையில் கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் மாதவன் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்திற்கான காசோலையை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் வழங்கினார்.