கோவை, டிச.25: ேகாவையில் ஆர்எஸ்எஸ் நடத்தும் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர், விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, திராவிடர் விடுதலைக் கழகம், மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து கலெக்டரிடம் மனு அளித்தனர். இது குறித்து தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் கு.ராமகிருஷ்ணன் கூறியதாவது: ஆர்எஸ்எஸ்யின் துணை அமைப்பான ராஷ்ட்ர சேவிகா சம்தி என்கிற இந்துத்துவா அமைப்பின் பயிற்சி முகாம் கோவை தனியார் கல்லூரியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.