ஈரோடு, டிச. 23: இல்லம் தேடி கல்வி திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்களை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடங்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக செயல்படுத்துப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இத்திட்டத்திற்காக அங்கன்வாடி மையங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோபி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் அங்கன்வாடி மையங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. அங்கன்வாடி மையங்கள் சிறியதாக இருப்பதால் இட நெருக்கடி ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. அங்கன்வாடி மையத்தில் காஸ் சிலிண்டர் மற்றும் சமையல் செய்யும் பொருட்கள், குழந்தைகள் அமரும் மேஜைகள் உள்ளிட்டவைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இதனால் இட நெருக்கடி ஏற்படுவதாக கல்வி திட்ட பயிற்றுநர்கள் தெரிவித்துள்ளனர்.