குறிஞ்சிப்பாடி அருகே தம்பதியை தாக்கிய 4 பேருக்கு வலை

குறிஞ்சிபடி, டிச. 16:   குறிஞ்சிப்பாடி அருகே நிலம் சம்பந்தமான பிரச்னையில் தம்பதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். குறிஞ்சிப்பாடி அடுத்த கிருஷ்ணன் பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் மனைவி லதா(34). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் குடும்பத்திற்கும், கடந்த 15 ஆண்டு காலமாக இடம் தொடர்பான பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இரு குடும்பத்தாருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது, கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி மகாலட்சுமி, மகன்கள் ராஜமோகன், ராஜமுருகன் ஆகியோர் சேர்ந்து, லதா மற்றும் அவரது கணவர் மணிகண்டனை திட்டி, தாக்கி, மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் கிருஷ்ணமூர்த்தி உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories: