ஊட்டி, டிச.8: சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மண் பாதையை மாற்றி சாலை வசதி ஏற்படுத்தி தர கோரி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதி மக்கள், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:சேரங்கோடு ஊராட்சி நெல்லியாளம் நெம்பர்-2 கிராமத்தில் 1.5 கி.மீ. தூரம் சேறும், சகதியுமாக மண்பாதை காணப்படுகிறது. இதனால், அவசர காலங்களில் விரைவாக வெளியிடங்களுக்கு செல்ல முடியாமல் பாதிக்கப்படுகிறோம். அங்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலை உள்ளது. இதனால் நோயாளிகள், பள்ளி குழந்தைகள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். நோயாளிகளை அழைத்து செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.