ஏரல், டிச. 7: ஏரல் அருகே பண்டாரவிளையில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், ஜெ. பேரவை வை ஒன்றியச் செயலாளர் பாஸ்கர், விவசாய அணி மாவட்ட துணைத்தலைவர் பால்துரை மற்றும் நிர்வாகிகள் பண்டாரவிளை கிருபாகரன், கோபால், மூக்காண்டி, பெருமாள், செல்வமுருகன், அயன்ராஜ், சேர்மராஜா, பெரியசாமி, ராசுகுட்டி, சிவா, சாமுவேல், மூக்காண்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.