நெல்லை மாநகர பகுதியில் நகை பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் சிக்கினார்

நெல்லை,டிச.6: நெல்லை மாநகர பகுதியில் சாலைகளில் நடந்து செல்லும் பெண்களிடம் நகைகள் பறித்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்ட வாலிபரை பாளை குற்றப்பிரிவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து 7 பவுன் நகையும் மீட்கப்பட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியான பெருமாள்புரம், ஐகிரவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை நோட்டமிட்டு பின்னால் பைக்கில் வந்து நகை பறிப்பு சம்பவம் அடிக்கடி நடந்துவந்தது. இதுதொடர்பாக பாளை குற்றப்பிரிவு போலீசார் நகை பறிப்பு சம்பவம் நடந்த இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமிரா உதவியுடன் மர்ம நபரை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதில் பேய்குளம் பகுதியை சேர்ந்த சங்கர் (21) என்ற வாலிபர் நகை பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் சங்கரை  பிடித்து நடத்திய விசாரணையில் அவர் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்த 7 பவுன் நகையை பறிமுதல் செய்து   விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: