மோப்ப நாயிடம் இருந்து தப்பினார்

புஷ்பம் வீடும், சொர்ணலதா வீடும் அருகருகே தான் உள்ளன. நேற்று மதியம் மோப்ப நாய் வந்து கொள்ளை நடந்த வீட்டில் சோதனை செய்த போது, சொர்ணலதாவும் அங்கும், இங்கும் ஓடியவாறு தான் இருந்துள்ளார். ஆனால் மழை பெய்ததால், சரியான நுகர்வு தன்மை நாய்க்கு கிடைக்காமல் போய் விட்டது. இதனால் அருகில் இருந்த சொர்ணலதா மோப்ப நாயிடம் தப்பி விட்டார் என கூறிய போலீசார், கைரேகையில் ஏமாற்ற முடியாமல் சிக்கி ெகாண்டார் என்றனர். கைதான சொர்ணலதாவுக்கு மணிகண்டன் என்ற கணவரும், 2 குழந்தைகளும் உள்ளனர். மணிகண்டன் வெளிநாட்டில் உள்ளார். இன்னும் சில வாரங்களில் அவர் வர உள்ளார். இந்த நிலையில் திருட்டு வழக்கில், சொர்ணலதா கைதாகி இருப்பது அவர்களது குடும்பத்தை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Related Stories: