திருவண்ணாமலை, டிச.2: திருவண்ணாமலை அருகே ஏரிக்கு காவல் இருந்த காவலாளியை தாக்கிய வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை கீழ்நாத்தூர் பகுதியை சேர்ந்தவர் தோமிக்(49), அதே பகுதியில் உள்ள ஏரியை, இவரது உறவினர் குகன் என்பவர் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஏலம் எடுத்து மீன் வளர்த்து வருகிறார். இந்த ஏரிக்கு காவலாக ேதாமிக் மாத ஊதியத்திற்கு பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 29ம் தேதி ஏரியில், வானியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்த சிலர் திருட்டு தனமாக மீன் பிடித்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களில் ஒருவரிடமிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் செல்போன் வாங்கி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.